search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vandalur park"

    வண்டலூர் பூங்காவுக்கு கேமரா வசதியுள்ள செல்போன் கொண்டு சென்றால் கேமரா கட்டணம் வசூலிக்கப்படுவதாக பார்வையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். #VandalurPark

    சென்னை:

    வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்களில் கூட்டம் அலைமோதும். இங்குள்ள புலி, சிங்கம், கரடி, முதலைகள் போன்ற விலங்குகளை பொதுமக்கள் கண்டு ரசித்து வருகிறார்கள்.

    வண்டலூர் பூங்காவில் நுழைவு கட்டணம் பெரியவர்கள், குழந்தைகளுக்கு தனித்தனியாக வசூலிக்கப்படுகிறது. மேலும் பார்வையாளர்கள் கொண்டு வரும் கேமராவுக்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் கேமரா வசதியுள்ள செல்போன்களுக்கு கேமரா கட்டணம் வசூலிக்கப்படுவதாக பார்வையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக பார்வையாளர்களில் சிலர் கூறியதாவது:-

    வண்டலூர் பூங்காவுக்கு செல்ல நுழைவு கட்டணம் செலுத்தி வாங்கினோம். உள்ளே செல்ல முயன்றபோது அங்கிருந்த காவலாளிகள் கேமராவிற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் கேமரா இல்லை என்று தெரிவித்தோம். ஆனால் கேமரா வசதியுள்ள செல்போனை எடுத்து செல்வதால் அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதைகேட்க அதிர்ச்சியாக இருந்தது. கேமராவுக்கும், செல்போன் கேமராவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று பூங்கா நிர்வாகத்துக்கு தெரியவில்லையா? செல்போன் கேமராவில் ஒரளவுக்குதான் விலங்குகளை ‘ஜூம்’ செய்து படம் பிடிக்க முடியும். கேமரா போன்று படம் பிடிக்க முடியாது.

    நாங்கள் ‘செல்பி’ மட்டும் தான் எடுக்கிறோம். அதற்காக செல்போனுக்கு கேமரா கட்டணம் வசூலிக்கப்படுவது எப்படி முறையாகும்?. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #VandalurPark

    வண்டலூர் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்காக புதியதாக 7 வண்ண கிளிகள் வைக்கப்பட்டு உள்ளன. இவைகளை பொதுமக்கள் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #VandalurPark
    சென்னை:

    வண்டலூர் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்காக புதியதாக 7 வண்ண கிளிகள் வைக்கப்பட்டு உள்ளன.

    இதுதொடர்பாக பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வண்டலூர் பூங்காவில் பொதுமக்களின் பார்வைக்கு புதிய ஏழு பறவை இனங்கள் வைக்கப்பட்டுள்ளது. அவை ‘ஸ்கார்லெட் பஞ்சவர்ண கிளி, கேட்டிலைனா பஞ்சவர்ணகிளி, ஹர்லிகுயின் பஞ்சவர்ண, சீவர் பஞ்சவர்ணகிளி, டஸ்கீ பாய்னஸ், ரூபெல்ஸ் கிளி, அமேசான் ஆரஞ்ச் இறகு கிளி’ ஆகும்.

    இப்பறவைகள் பொதுவாக மத்திய மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் காணப்படுபவை. இந்த புதிய பறவையினங்கள் சென்னையில் மீட்கப்பட்டு பின்னர் கால்நடை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

    இந்த பறவைகள் நல்ல ஆரோக்கியமான நிலைக்கு வந்ததனால் பார்வையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் வண்ணமிகு நிறங்கள் மற்றும் தனித்துவமான குரலின் மூலம் அதிக பார்வையாளர்களை ஈர்க்க கூடியதாக உள்ளது.


    உயிரியல் பூங்காவில் ஏற்கனவே 89 வகையான பறவை இனங்கள் உள்ளன. அதில் உள்ளூர் பறவையினம் 61 மற்றும் அயல்நாட்டு பறவை இனங்கள் 28 என ஆக மொத்தம் 1604 எண்ணிக்கையில் பறவைகள் உள்ளன. இப்பறவைகள் நல்ல முறையில் இனப்பெருக்கம் செய்து வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #VandalurPark
    ×