search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "unhealthy"

    • வீட்டில் சமைப்பது என்பது பல நன்மைகளை நிறைந்துள்ளது.
    • பொதுவான சமையல் தவறுகள் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.

    உணவில் வீட்டு சமையல் ஆரோக்கியமானதா ? அல்லது வெளி உணவு ஆரோக்கியமானதா ? என்று கேட்டால் வெளி உணவு சாப்பிட்டாலும் அவர்கள் சொல்லக்கூடிய வீட்டு சமையலே சிறந்தது என்று.

    ஆனால், வீட்டு சமையலிலும் நம் செய்யும் முறையில் ஏற்படும் தவறுகளால் வீட்டு உணவும் ஆரோக்கியமற்றதாக மாறிவிடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ஐஎம்சிஆர் வீட்டு உணவை மிகவும் ஆரோக்கியமானதாகவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் மாற்றுவதற்கான வழிகளைப் பட்டியலிட்டுள்ளது. 

    வீட்டில் சமைப்பது பலருக்கு நிம்மதியாக இருக்கும். இது சிலருக்கு அது ஓய்வெடுக்கவும் உதவுகிறது. மற்றவர்களுக்கு சமையல் ஒரு வழக்கமான சாதாரண வேலையாகத் தோன்றும்.

    ஆனால் வீட்டில் சமைப்பது என்பது பல நன்மைகளை நிறைந்துள்ளது. இருப்பினும், அதில் உள்ள ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய பண்புகளைக் கட்டுப்படுத்துவது முக்கியமானது.

    உடல் எடையை குறைக்கும் போது கூட, வீட்டு உணவை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. ஆனாலும், உணவை ஆரோக்கியமற்றதாக மாற்றும் சில சமையல் நுட்பங்கள் அதில் உள்ளன.

    இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 17வது அத்தியாய வழிகாட்டியை வெளியிட்டது.

    இது இந்தியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய உணவுப் பழக்கங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவற்றை எடுத்துக்காட்டுகிறது.

    முதலில், சில பொதுவான சமையல் தவறுகள் என்ன என்பதை அறிந்து கொள்வோம். 

    * அதிக வேகவைத்த காய்கறிகள்:

    காய்கறிகளை அதிகமாக சமைப்பது ஊட்டச்சத்துக்களை இழக்க வழிவகுக்கும். ஏனெனில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வெப்பத்தை உணர்திறன் கொண்டவை. அவை நீண்ட நேரம் சமைப்பதன் மூலம் அழிக்கப்படலாம்.

    * எண்ணெய் அல்லது வெண்ணெய் அதிகமாகப் பயன்படுத்துதல்:

    அதிகப்படியான எண்ணெய் அல்லது வெண்ணெய்யை பயன்படுத்துவது உணவுகளில் அதிக கலோரி மற்றும் கொழுப்பு உள்ளடக்கத்தை கணிசமாக அதிகரிக்கலாம். இது எடை அதிகரிப்பு மற்றும் உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். 

    * உயர் வெப்பநிலை சமையல்:

    அதிக வெப்பநிலையில் சமைப்பது, டீப் ப்ரை போன்றவை புற்றுநோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்புடைய அக்ரிலாமைடுகள் மற்றும் ஹெட்டோரோசைக்ளிக் அமின்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை உருவாக்க வழிவகுக்கும்.

    * அதிகப்படியான உப்பு பயன்பாடு: சமைக்கும் போது அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவு உப்பைச் சேர்ப்பது உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு பங்களிக்கும்.

    உணவுப் பாதுகாப்பைப் புறக்கணித்தல்:

    முறையற்ற உணவைக் கையாளுதல், சேமித்தல் அல்லது சமைத்தல் ஆகியவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இதன் விளைவாக உணவு மூலம் பரவும் நோய்கள் ஏற்படலாம்.

    ஐஎம்சிஆர்-ன் சமீபத்திய உணவு வழிகாட்டுதல்கள் "அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை அல்லது உப்புடன் தயாரிக்கப்பட்டால் வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகள் கூட ஆரோக்கியமற்றதாகிவிடும். 

    அதிக கொழுப்பு அல்லது அதிக சர்க்கரை உணவுகள் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. குடல் நுண்ணுயிரிகளை பாதிக்கின்றன. இது உணவில் விரைவாக மாறுகிறது.

    அதிக உப்பு கொண்ட உணவுகள் உயர் இரத்த அழுத்த அபாயத்தை அதிகரிக்கின்றன. சிறுநீரகங்கள் பாதிப்புக்கு வழி வகுக்கின்றன. எனவே, அதிக உப்பு உட்கொள்வது ஆரோக்கியமற்றது.

    இந்த பொதுவான சமையல் தவறுகளை கவனத்தில் கொண்டு ஆரோக்கியமான நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம், நம் ஒட்டுமொத்த நல்வாழ்வை ஆதரிக்கும் சுவையான, சத்தான உணவை உருவாக்கலாம்.

    சமையலில் மிதமான மற்றும் சீரான அணுகுமுறை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் பல பக்க விளைவுகள் ஏற்படும் என்ற அச்சமும் இருக்கிறது. இதில் எது உண்மை? என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    ‘மைக்ரோவேவ் அடுப்பு’ (நுண்ணலை அடுப்பு) மூலம் சமைத்தால் உணவில் இருக்கும் சத்துக்கள் போய்விடுமா?’  இந்தச் சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இன்னொருபுறம் மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் பல பக்க விளைவுகள் ஏற்படும் என்ற அச்சமும் இருக்கிறது. இதில் எது உண்மை? எது புனைவு? என்பதை காண்போம்!

    மைக்ரோவேவ் அடுப்பு எப்படிச் செயல்படுகிறது?

    ‘மைக்ரோவேவ் அடுப்பில் உணவைச் சமைக்கும் போது, முதலில் அடுப்பினுள் மின்சார அலை உண்டாகும். அந்த அதிர்வினால் நீர், கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றின் மூலக்கூறுகள் அதிர்வடைந்து ஒன்றுடன் ஒன்று உராய்ந்து வெப்பம் உண்டாகும். கண்ணாடி மற்றும் பீங்கான் பாத்திரங்களை இந்த அலை பாதிக்காது. மைக்ரோவேவ் அடுப்பில் சமைக்க அதற்குரிய பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்’

    மைக்ரோவேவ் அடுப்புக்குள் இருக்கும் மேக்னெட்ரான் என்னும் கருவி அடுப்புக்குள் வைத்த உணவுப் பொருளைச் சூடேற்ற உதவுகின்றது. இதில் சமைக்கும் நேரமும் குறைவு, காய்கறிகளில் உள்ள சத்துக்கள் மறைந்து போகாது.

    இந்த சந்தேகம் குறித்து உணவியல் நிபுணர் பேசியபோது, “காய்கறிகளையும் ஒயிட் மீட் என்று சொல்லப்படும் மீன், கோழி ஆகியவற்றையும் மைக்ரோவேவ் அடுப்பில் சமைப்பதால் சத்துக்களில் பெரிய இழப்பு எதுவும் ஏற்படுவதில்லை.

    ரெட் மீட் எனப்படும் ஆட்டு இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சி போன்றவற்றில் நிறைய எண்ணெய் விட்டு மசாலாக்கள் சேர்த்துச் சமைத்தால் சாப்பிட ருசியாக இருக்குமே தவிர ஆரோக்கியமானதாக இருக்காது.” என்றார்.

    “மைக்ரோவேவ் அடுப்பில் பாலைச் சுடவைத்தால் அதிலுள்ள லைசோஸைம் சிதையும். சாதாரண அடுப்புச் சமையலின்போது பாத்திரத்தில் காய்கறிகளை அதிக நேரம் அடுப்பில் வைத்துவிட்டால் அது கருகியும் தீய்ந்தும் போய்விடும். அவற்றையே குக்கரில் வேக வைக்கும்போது காய்கறிகளின் ருசி குறைந்துவிடும் சாத்தியம் அதிகம்.

    ஆனால் மைக்ரோவேவ் அடுப்பில் சரியான சூட்டில் முறையாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளின் சத்துக்கள் அப்படியே இருக்கும். காய்கறிகளின் நிறமும் மாறாது”

    மைக்ரோவேவ் அடுப்பை எப்படி பயன்படுத்த வேண்டும்?

    சாதாரணமாக மைக்ரோவேவ் அடுப்பில் காய்கறிகளைச் சமைத்து முடித்ததும் ஸ்விட்சை அணைத்துவிட, அதன் இயக்கம் முழுவதும் நின்றுவிடும். ஸ்விட்ச் அணைக்கப்பட்ட நொடியில் மின் அலைகள் மறைந்து போவதால் அடுப்புக்குள் கதிர்வீச்சு எதுவும் இருக்காது.



    சமைத்த உணவிலும் எவ்விதக் கதிர்வீச்சின் தாக்கமும் இருக்காது. ஆனால், இதுவே அடுப்பில் கசிவு இருந்து அது தெரியாமல் சமைத்தால் நிச்சயம் பிரச்சனை ஏற்படும். எனவே தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் அடுப்புகளையே பயன்படுத்தவேண்டும்.

    மைக்ரோவேவ் அடுப்பில் சமைக்கும் போது அதன் கதவை நன்றாக மூடி லாக்கான பிறகே சமைக்க வேண்டும். சரியாக மூடாவிட்டால் கசிவு ஏற்பட்டுத் தீக்காயம் ஏற்படும். அடுப்பில் எதாவது பிரச்சனை என்றால், உடனடியாகப் சர்வீஸுக்கு கொடுக்க வேண்டும்.

    மைக்ரோவேவ் அடுப்பை வாங்கும்போது தரப்பட்ட கையேட்டை நன்றாகப் படித்த பின்னரே அதில் சமைக்க ஆரம்பிக்க வேண்டும். மைக்ரோவேவ் அடுப்பில் கோளாறு ஏற்பட்டால் அதை நாமே பழுது பார்க்க முயற்சி செய்யக் கூடாது.

    ‘மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் புற்றுநோய் ஏற்படும்’ என்று ஒரு பிரிவினருக்கு அச்சம் இருந்தாலும் இது குறித்து எந்த ஆராய்ச்சி முடிவும் இதுவரை வெளிவரவில்லை.

    மைக்ரோவேவ் அடுப்பில் செய்யக் கூடாதவை:

    * மைக்ரோவேவ் அடுப்பில் உணவு சமைக்கும் போது அடிக்கடி திறந்து மூடக்கூடாது. குறுகிய வாயுள்ள பாத்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது

    * முட்டையை ஓட்டுடன் வைக்கக்கூடாது.

    * வறுவல் செய்யும்போது உப்பு போடக்கூடாது, ஏனெனில் அப்படிச் சமைத்தால் உப்பு தீய்ந்து அதிலிருக்கும் ஐயோடின் சிதைந்து போய்விடும். எனவே, வறுத்த பின்பு உப்பு சேர்க்க வேண்டும்.

    * பிளாஸ்டிக் மற்றும் காகிதப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் அவை உருகி, எரிந்து போய்விடும்

    * தண்ணீரைச் சுட வைக்க மைக்ரோவேவ் அடுப்பைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் இதன் நுண் கதிர்களால் தண்ணீரின் மூலக்கூறுகள் அசைக்கப்பட்டுத்தான் தண்ணீர் சூடாகும்.

    அதனால் நீராவி வெளியேறாது. தண்ணீர் அதன் கொதி நிலையான 100 டிகிரி செல்ஸியஸ் அளவையும் தாண்டி சூடாகும். ஆனால், தண்ணீர் கொதிப்பில் சலனம் எதுவும் இருக்காது. இது தெரியாமல் அடுப்பை அணைத்ததும் உள்ளிருந்து நீரை அஜாக்கிரதையாக எடுத்தால் தப்பித் தவறி தண்ணீர் உடம்பில் பட்டுத் தீக்காயம் ஏற்படும்.
    ×