search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐசிஎம்ஆர்"

    • மருத்துவ நிபுணர்கள் அவ்வப்போது மறுத்து வந்தாலும் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படவில்லை.
    • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டும் வந்தது.

    புதுடெல்லி:

    கொரோனா தொற்றுக்கு பிறகு இளம் வயதில் மாரடைப்பில் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு கொரோனா தடுப்பூசியே காரணம் என்று பரவலாக மக்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.

    இதை மருத்துவ நிபுணர்கள் அவ்வப்போது மறுத்து வந்தாலும் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படவில்லை. இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டும் வந்தது.

    இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளால் இளைஞர்களிடையே திடீர் மரணம் ஏற்படவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

    மேலும் ஐ.சி.எம்.ஆர். நடத்திய ஆய்வில், மரபு தொடர்பான நோய்கள், வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால்தான் இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

    ×