search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Two people arrest sand smuggling"

    பூதப்பாண்டி அருகே டெம்போவில் மணல் கடத்தியதாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு மணல் மற்றும் பாறை கற்கள் கடத்திச் செல்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் மணல் கடத்துபவர்களை கைது செய்ய உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி போலீசார் கடத்தல் சம்பவத்தில் ஈடுபடுபவர்களை கண்காணித்து கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பூதப்பாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மரிய செல்வம் மற்றும் போலீசார் கடுக்கரை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக டெம்போ ஒன்று வேகமாக வந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் எந்தவித அனுமதி இன்றி திடல் பகுதியில் உள்ள ஓடையில் இருந்து 30 மூட்டைகளில் மணல் கடத்தி வருவது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து மணல் கடத்தி வந்த டெம்போவை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டுச்சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது டெம்போவை ஓட்டி வந்தது அதே பகுதியைச் சேர்ந்த மணி(வயது35), கிளினர் ராஜன்(31) என்பது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×