search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tondiarpet home fire"

    தண்டையார்பேட்டையில் மாநகராட்சி ஊழியர் வீட்டுக்கு தீ வைத்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் குப்புராஜ். மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது நள்ளிரவில் கதவில் இருந்த ஸ்கிரீன் துணியில் தீப்பிடித்து எரிந்தது.

    உடனே குப்புராஜ் கண் விழித்து பார்த்தபோது மர்ம நபர்கள் தப்பி ஓடினார்கள். அவரது கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைத்தனர்.

    அப்போது வீட்டு வாசலில் பெட்ரோல் கேன் ஒன்று இருந்தது. இதுகுறித்து போலீசில் குப்புராஜ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    முன்விரோதத்தில் குப்பு ராஜ் வீட்டுக்கு தீ வைத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×