search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thrissur woman"

    ஓணம் பம்பர் லாட்டரியில் ஏழை பெண்ணுக்கு ரூ.10 கோடி பரிசு விழுந்துள்ளது. #ThiruvonamBumperLottery #ThrissurWoman
    கொழிஞ்சாம்பாறை:

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள அரசு சார்பில் சிறப்பு பம்பர் லாட்டரி விற்பனை தொடங்கப்பட்டது. இதில் பம்பர் பரிசாக ரூ.10 கோடி அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பம்பர் லாட்டரி விற்பனை கேரளாவில் பரபரப்பாக நடைபெற்றது.

    இதற்கான குலுக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த குலுக்கலில் கேரள மந்திரிகள், அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதில் பம்பர் பரிசான ரூ.10 கோடி திருச்சூர் அருகே உள்ள அட்டாடி பகுதியை சேர்ந்த வல்சலா (வயது 56) என்ற ஏழை பெண்ணுக்கு கிடைத்துள்ளது. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் சொந்த வீடு இல்லாததால் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.

    பரிசு விழுந்த பெண்ணுக்கு அரசின் வரிகள் போக மீதி 6 கோடியே 34 லட்சம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #ThiruvonamBumperLottery #ThrissurWoman
    ×