search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theppa Chariot Festival"

    • கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தெப்பத்தேர்த்திருவிழாவை முன்னிட்டு கடந்த 26-ந்தேதியன்று கொடி யேற்றம் நடைபெற்றது.
    • வான வேடிக்கைகள் முழங்க சிறப்பாக தெப்பத்தில் 11 முறை தேர் வலம் வந்தவுடன் தேரோட்டம் முடிவுற்றது.

    சிவகிரி:

    சிவகிரி ஜமீனுக்குப் பாத்தியப்பட்ட கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தெப்பத்தேர்த் திருவிழாவை முன்னிட்டு கடந்த 26-ந்தேதியன்று கொடி யேற்றம் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு நாள் திருவிழா வும் ஒவ்வொரு சமூகத்தினரால் நடத்தப்பட்டது. முத்துக்குமாரசாமிக்கு ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு மான், மயில், அண்டரண்ட பட்சி, யானை, காமதேனு போன்ற வாகனங்களில் சப்பரத்தில் அமர்ந்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சிய ளித்தார்.

    தெப்பத்தேர்த் திருவிழாவை முன்னிட்டு முத்துக்குமாரசாமி கோவி லிருந்து எழுந்தருளி புறப்பட்டு தங்கு மண்டபத்திற்கு வருகை தந்து பின்பு அங்கிருந்த கூடாரப் பாறை பால சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்பாக அமைந்துள்ள தெப்பத்தில் அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த தேரில் வந்து அமர்ந்தார்.

    சிவகிரி ஜமீன்தார் சேவுகப் பாண்டியன் என்ற விக்னேஸ்வர சின்னத் தம்பியார் இரவு 9.30 மணி யளவில் வடம் தொட்டு கொடுத்தவுடன் பக்தி கரகோஷம் முழங்க பக்தர் கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தெப்பத்தேர்த் திருவிழா தொடங்கியவுடன் வான வேடிக்கைகள் முழங்க தெப்பத்தேர் திருவிழா சிறப்பாக தெப்பத்தில் 11 முறை தேர் வலம் வந்தவுடன் தேரோட்டம் முடிவுற்றது.

    ஏற்பாடுகளை சிவகிரி ஜமீன்தார் சேவுகப்பாண்டி யன் என்ற விக்னேஸ்வர சின்னத்தம்பியார், ராணி பாலகுமாரி நாச்சியார், ராணி பிரசன்னா, ராணி ஸ்ரீ தங்கதேவசேனா நாச்சி யார் மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    திருவிழாவைக் காண ராஜபாளையம், சங்க ரன்கோவில், புளியங்குடி, வாசுதேவநல்லூர், தளவாய்புரம், ராயகிரி போன்ற பகுதியில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

    இதில் வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரு மான பொன் முத்தையா பாண்டியன், மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் மனோகரன், பேரூர் செய லாளர் செண்பகவிநாயகம், சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, துணைத் தலைவர் லட்சுமி ராமன், சிவகிரி தேவர் மகாசபை தலைவர் குருசாமிபாண்டி யன், கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மருதுபாண்டியன், உள்ளார் தளவாய்புரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ், கவுன் சிலர்கள் செந்தில்குமார், சித்ரா, ரமேஷ், விக்கி, கிராம நிர்வாக அலுவ லர்கள், தலையாரிகள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    ×