என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Theft goats"
- தொழுவத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு இறைவைத்து விட்டு இரவில் மாடசாமி தூங்க சென்றார்.
- காலை பார்த்த போது ஒரு ஆட்டை காணவில்லை.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மாடசாமி (வயது65). விவசாயி. இவர் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வருகிறார்.
வீட்டின் அருகே உள்ள தொழுவத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு இறைவைத்து விட்டு இரவில் மாடசாமி தூங்க சென்றார். நேற்று காலை பார்த்த போது ஒரு ஆட்டை காணவில்லை.
மேலும் அவரை ஆட்டை வாலிபர்கள் சிலர் திருடி கயத்தாறு வாரசந்தையில் விற்பனைக்கு கொண்டு சென்றதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அவர் நேற்று கயத்தாறு சந்தைக்கு சென்றார். அப்போது அவரது ஆட்டை சிலர் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
இது குறித்து அவர் கயத்தாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் பேட்டை அருகே உள்ள கண்டியப்பேரியை சேர்ந்த 3 வாலிபர்கள் என்பதும், அவர்கள் தான் மாடசாமியின் ஆட்டை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் 3 வாலிபர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்