என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "The National People's Court"
- வருகிற 13ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் நடைபெற உள்ளது.
- தொழிலாளர் நலன் இழப்பீடு, கல்வி கடன், வங்கி கடன், குடும்ப வன்முறை வழக்கு, காசோலை, நுகர்வோர் வழக்கு உள்ளிட்டவை பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
தேனி:
தேனி மாவட்ட சட்ட ப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சஞ்சய் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்ட ப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பெரியகுளம், உத்தம பாளையம், ஆண்டிபட்டி, போடி வட்ட சட்டப்பணிகள் குழுவில் வருகிற 13ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் நடைபெற உள்ளது.
நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி மற்றும் ஒரு வக்கீல் உறுப்பினர் கொண்ட அமர்வு முன்னிலையில் வழக்குகள் நடைபெற உள்ளது. இதில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, சொத்து மற்றும் பணம் சம்மந்தப்பட்ட வழக்கு, ஜீவனாம்சம், நில ஆக்கிரமிப்பு, தொழிலாளர் நலன் இழப்பீடு,
கல்வி கடன், வங்கி கடன், குடும்ப வன்முறை வழக்கு, காசோலை, நுகர்வோர் வழக்கு உள்ளிட்டவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்தி நிலுவையில் உள்ள வழக்கு பிரச்சி னைகளை சமாதானமாக வும், நிறைவாகவும் சுமூக மாகவும் தீர்வு காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்