search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The mysterious mob fled at lightning speed"

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் துணிகரம்
    • போலீசார் விசாரணை

    போலீசார் விசாரணைஜோலார்பேட்டை :

    ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் ராகவன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் கவுந்தரராஜன் இவரது மனைவி சித்ரா (வயது 58). இவர் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் டைபிஸ்டாக வேலை செய்து வருகிறார்.

    செயின் பறிப்பு இவர் வழக்கும் போல் நேற்று இரவு நீதிமன்றம் அலுவலகத்தில் பணி முடிந்து வீட்டிற்கு தனது மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது லாரி ஷெட் அருகே ரெயில்வே தரை பாலத்தில் வழியாக செல்லும் போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சித்ரா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலி செயினை பறித்துச் சென்றனர்.

    அப்போது சித்ரா கூச்சல் போடவே அங்கிருந்த மர்ம கும்பல் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இது குறித்து சித்ரா கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×