search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thanneer panthal"

    முதுகுளத்தூர் பகுதியில் பொதுமக்களின் தாகத்தை தணிக்க, பேரூராட்சி சார்பில் 5 இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு, பராமரிக்கபடுகிறது.
    முதுகுளத்தூர்:

    முதுகுளத்தூரை சுற்றியுள்ள கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகள், பணபரிமாற்றம், அரசு, தனியார் அலுவலகங்களுக்கு வருவது நாளுக்குநாள் அதிகரித்துள்ளது.

    கோடை வெயில் அதிகரித்துள்ளவேளையில், தண்ணீர் தாகத்திற்காக கடைகளில் 20 ரூபாய்க்கு குடிநீர் கேன்களை வாங்க முடியாத மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில், முதுகுளத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி தலைமையில், காந்திசிலை, பஸ் நிலையம் அரசு மருத்துவமனை, வடக்கூர், ஊராட்சி ஒன்றிய அலுவலக பகுதிகளில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனை பராமரிக்க, சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, போதுமான தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, செயல் அலுவலர் மாலதி தெரிவித்துள்ளார்.
    ×