என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "textile shop"
- புரசைவாக்கத்தில் மூடப்பட்டுள்ள ஜவுளிக்கடையின் வெளிப்புர கண்ணாடி திடீரென உடைந்து விழுந்தது.
- கண்ணாடி உடைந்து விழுந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வந்த துணிக்கடை கடந்த ஓராண்டாக மூடி கிடக்கிறது.
3 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் முதல் தளத்தில் துணிகடையும், 2-வது தளத்தில் அலுவலகமும் செயல்பட்டு வந்தன. 3-வது தளத்தில் வீடு ஒன்று இருந்தது.
இந்த கட்டிடம் பழமையானதாக இருந்ததால் முதல் மாடியில் இருந்து 3-வது மாடி வரை மூடியே உள்ளது. தரைதளத்தில் மட்டும் 4 கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று மாலை மூடப்பட்டுள்ள ஜவுளிக்கடையின் வெளிப்புர கண்ணாடி திடீரென உடைந்து விழுந்தது.
நடைபாதையில் நடந்து சென்ற பெண்கள் மீது விழுந்தது. இதில் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி, பரிமளா ஆகிய 2 பெண்கள் காயம் அடைந்தனர். இந்த இருவரும் உடனடியாக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் வேப்பேரி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கண்ணாடி உடைந்து விழுந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழமையான கட்டிடத்தின் உரிமையாளர் பெயர் அலிபாய் என்பதும். இவர் அமெரிக்காவில் வசித்து வருவதும் தெரியவந்து உள்ளது. மாங்காட்டை சேர்ந்த முகமது அன்வருதீன் என்பவர் கட்டிடத்தை பராமரித்து வந்துள்ளார்.கண்ணாடி உடைந்து விழுந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
செங்குன்றம் ஜி.எஸ்.டி சாலையில் தனியாருக்கு சொந்தமாக ஜவுளிக்கடை உள்ளது. 4 மாடிகளை கொண்ட இந்த கடையில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு சென்றனர். நள்ளிரவு 2.30 மணியளவு கடையில் இருந்து புகை வருவதாக சிலர் தெரிவித்தனர்.
இதையடுத்து கடை உரிமையாளர் டேவிட்ராஜ் கடைக்கு வந்தார். அப்போது கடையில் உள்ள துணிகள் தீப்பற்றி எரிவது தெரிய வந்தது. இதுகுறித்து தீ அணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் செங்குன்றம், மாதவரம், மணலி, அம்பத்தூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். சென்னை மாவட்ட உதவி தீயணைப்பு அதிகாரி பாஸ்கரன், மாதவரம் தீயணைப்பு நிலைய அதிகாரி சற்குணம் ஆகியோர் மேற்பார்வையில் 25 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
5 மணிநேர போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் வந்தது. காலை 7.30 மணிக்கு தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
இந்தநிலையில் ஜவுளி கடையில் தரைபகுதி, முதல்மாடி, 2-வது மாடியில் உள்ள துணிகள் முழுமையாக எரிந்து நாசமாகின. 3-வது மாடியிலும் துணிகள் எரிந்து இருந்தன.
இந்த பயங்கர தீவிபத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள துணிகள் எரிந்து சாம்பலாகி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்