search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "termite drug"

    கோவையில் ஜூஸ் என நினைத்து கரையான் மருந்து குடித்த குழந்தை பரிதாபமாக இறந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை காந்திமா நகரை சேர்ந்தவர் கார்த்திக். கட்டிட தொழிலாளி. இவரது மகள் ரித்திகா ஸ்ரீ (3). கார்த்திக் வீட்டில் கரையான் தொந்தரவு இருந்தது. இதற்காக அவர் கரையான் மருந்து வாங்கி தெளித்து விட்டு மீதி மருந்தை ஒரு பாட்டிலில் வைத்து உள்ளார். 

    இதனை வீட்டில் விளையாடி கொண்டிருந்த ரித்திகா ஸ்ரீ ஜூஸ் என நினைத்து குடித்து விட்டாள். இதில் மயங்கி விழுந்த குழந்தையை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ரித்திகா ஸ்ரீ இறந்தாள்.

    இது குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×