என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » teacher protest
நீங்கள் தேடியது "teacher protest"
திசையன்விளை அருகே வருகை பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்க கோரி பள்ளி முன்பு ஆசிரியை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள மேற்கு தோப்புவிளையில் புனித அந்தோணியார் ஆரம்ப பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக சுகந்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளி தாளாளராக அதே ஊரைச் சேர்ந்த சேவியர் அருள்ராஜ் என்பவர் உள்ளார்.
தலைமை ஆசிரியருக்கும், பள்ளி தாளாளருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 நாட்களாக ஆசிரியை வருகை பதிவேட்டில் கையெழுத்திட பள்ளி நிர்வாகி மறுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வருகை பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்க கோரி ஆசிரியை சுகந்தி கடந்த மூன்று நாட்களாக பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திசெல்வி, கரைசுத்து புதூர் கிராம நிர்வாக அலுவலர் அயூப்கான் ஆகியோர் பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இப்பிரச்சனை தொடர்பாக இருவரும் பேசி முடிவு எடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. அதைதொடர்ந்து நேற்று மதியம் ஆசிரியர் தர்ணா போராட்டத்தை நிறைவு செய்தார்.
திசையன்விளை அருகே உள்ள மேற்கு தோப்புவிளையில் புனித அந்தோணியார் ஆரம்ப பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக சுகந்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளி தாளாளராக அதே ஊரைச் சேர்ந்த சேவியர் அருள்ராஜ் என்பவர் உள்ளார்.
தலைமை ஆசிரியருக்கும், பள்ளி தாளாளருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 நாட்களாக ஆசிரியை வருகை பதிவேட்டில் கையெழுத்திட பள்ளி நிர்வாகி மறுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வருகை பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்க கோரி ஆசிரியை சுகந்தி கடந்த மூன்று நாட்களாக பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திசெல்வி, கரைசுத்து புதூர் கிராம நிர்வாக அலுவலர் அயூப்கான் ஆகியோர் பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இப்பிரச்சனை தொடர்பாக இருவரும் பேசி முடிவு எடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. அதைதொடர்ந்து நேற்று மதியம் ஆசிரியர் தர்ணா போராட்டத்தை நிறைவு செய்தார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X