search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அரசை கண்டித்து தி.க.கட்சியினர் ஆர்ப்பாட்டம்"

    தருமபுரியில்ம த்திய அரசை கண்டித்து தி.க.கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. மத்திய அரசில் வங்கி எழுத்தர் பணிக்கு தமிழில் தேர்ச்சி கட்டாயமில்லை என தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பை பாதிக்கும் ஒன்றிய அரசின் செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம்  நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில இளைஞரணி துணை செயலாளர் செல்லதுரை தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஆனந்தன், சிரிதரன், அர்ச்சுனன், பூபதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கலைத்துறை செயலாளர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன், மாவட்ட தலைவர் பரமசிவம், மாவட்ட செயலாளர் யாழ்திலீபன், நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, பிரபாகரன், தமிழ்பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    ×