search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "college competition"

    விருதுநகர் மாவட்டத்தில் கருணாநிதி பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி வருகிற 3-ந் தேதி நடக்கிறது.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் வளர்ச்சித் துறையின்  2021- 22-ம் ஆண்டிற்கான  மானியக்கோரிக்கை அறிவிப்பில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால்நேரு, அம்பேத்கர், தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடத்தி  பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

    அதன்படி, கருணாநிதி பிறந்தநாளான வருகிற 3-ம் தேதி முற்பகலில்  கல்லூரி மாணவர்களுக்கு  பேச்சுப் போட்டிகள் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தின் வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. 

    இதில் அரசு, தனியார், அரசு உதவி பெறும்  கலைக் கல்லூரிகள்,  பொறியியல் கல்லூரிகள்,   பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் மாணவர்கள்  பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள்,  கல்லூரிகளுக்கு, கல்லூரிக்கல்வி  இணை இயக்குநர் வாயிலாக  அனுப்பப்படும். போட்டிக்கான தலைப்புகள், போட்டி நடைபெறும் நாளில்    அறிவிக்கப்படும்.கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம்,  2-ம்பரிசு ரூ.3 ஆயிரம்,  3-ம் பரிசு ரூ.2 ஆயிரம்  வீதத்திலும்  வழங்கப்பட உள்ளன.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்   சுசிலா  மேற்கொண்டுவருகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×