என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 332830
நீங்கள் தேடியது "ரூ.50 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை"
காரிமங்கலத்தில்ரூ.50 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனையானது.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் நடந்த கால்நடைகள் வாரச்சந்தையில், 50 லட்சம் ரூபாய் அளவுக்கு கால்நடைகள் விற்பனையாகின. தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் கால்நடை வாரச்சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தைக்கு சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கால்நடைகளை வாங்க வருவார்கள். இதனால் அன்றைய தினம் திருவிழா கூட்டம் போல் காரிமங்கலம் வாரசந்தை கலைகட்டும்.
இந்த நிலையில் நேற்று வாரச்சந்தை வழக்கம் போல் இயங்கியது. வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கால்நடைகளை வாங்க வந்து இருந்தனர். மேலும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் 450 மாடுகள், 37 லட்சம் ரூபாய்க்கும், 600 ஆடுகள், 12 லட்சம் ரூபாய்க்கும் என மொத்தம், 50 லட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனையாகின.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X