search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒகேனக்கல்லில் பரிசல்"

    நீர்வரத்து 8 ஆயிரமாக சரிந்ததால் ஒகேனக்கல்லில் இன்று முதல் பரிசல், குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
    பென்னாகரம், 

    கர்நாடக மாநிலம் பகுதிகளிலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கடந்த 7 நாட்களுக்கு முன்பு ஒகேனக்கல்லு க்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. 

    இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இருகரையும் ெதாட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
    அருவிக்கு செல்லும் நடைபாதையில் தண்ணீர் முழ்கடித்து சென்றது.
    இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி தடைவிதித்தார். இதனால் சுற்றுலா பயணிகள் வெள்ளத்தை கண்டு கழித்து சென்றனர்.  

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை தற்போது குறைந்தது.  இதனால் ஒகேன க்கல்லுக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது. ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    நீர்வரத்து குறைந்து வருவதால் ஒகேனக்கல் மெயின் அருவியில் குளிக்க வும், பரிசல் இயக்கவும் தடையை நீக்கி இன்று முதல் மாவட்ட கலெக்டர்  திவ்யதர்சினி அனுமதி அளித்துள்ளார்.
    இதனால் இன்றுகாலை ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். அவர்கள் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்பட இடங்களில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் பரிசல் சாவாரி மூலம் ஐவர்பாணியில் விழும் தண்ணீரை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல் களை கட்டியது. மீன் சாப்பாடு விற்பனை மும்முரமாக நடந்தது.  சுற்றுலா பணிகள் எண்ணைய் தேய்த்து  மசாஜ் செய்து குளித்தனர். நீர்வரத்தை கர்நாடக -தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர். 
    ×