என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 332808
நீங்கள் தேடியது "வேலூர் பென்ட்லெண்ட் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவு தொடக்கம் Intensive care unit started at Vellore Bentland Governmen"
வேலூர் பென்ட்லெண்ட் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் அண்ணாசாலையில் அரசு பெண்லேண்ட் மருத்துவமனையில் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொது மக்கள் சிகிச்சை பெற வருவார்கள். இங்கு அவசர தீவிர சிகிச்சை இல்லாமல் இருந்தது.
இதனால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் நிலை உள்ளது.
பென்ட்லெண்ட் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர அவசர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி இங்கு தீவிர சிகிச்சை பிரிவு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடந்ததது.
விழாவில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
இந்த தீவிர சிகிச்சை பிரிவில் 5 படுக்கைகள் மற்றும் அனைத்து மருத்துவ உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 24 மணி நேரமும், டாக்டர்கள் பணியில் இருப்பார்கள் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் இணை இயக்குனர் கண்ணகி, மருத்துவமனை முதன்மை தலைமை மருத்துவர் சதீஷ்குமார், டாக்டர்கள் குமரேசன், சந்தோஷ்குமார், அனிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X