search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்கலையில் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் திடீர் மாயம்"

    தக்கலையில் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் நேற்று கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. கடைக்கு சென்ற வாலிபர் திடீரென மாயமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் அருண். (வயது 34.) இவர் தக்கலையில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும் 2  குழந்தைகளும் உண்டு. 

    அருண் நேற்று கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அருணின் தந்தை செல்போனில் தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.  மேலும் அருணுக்கு  சொந்தமான மோட்டார் சைக்கிளும் காணவில்லை. 

    இதுபற்றி அருணின் தந்தை குரூஸ் மைக்கேல் தக்கலை போலீஸ்  நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடைக்கு சென்ற வாலிபர் திடீரென மாயமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×