search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம் பாய்ந்து சிறுவன் சாவு"

    கிருஷ்ணகிரி அருகே தண்ணீர் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலியானார்.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி அருகே உள்ள பிஜி புதூரை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் விக்னேஷ் (வயது13). அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.இந்த நிலையில் விக்னேஷ், எம்.சி. பள்ளி பிரிவு சாலைக்கு நண்பருடன் சென்றார். அங்கு மோகன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றிலிருந்து பாசனத்திற்கு நீர் பாய்ந்து க்கொண்டிருப்பதை கண்ட விக்னேஷ், தண்ணீர் தொட்டியில் இறங்கி குளித்தார். 

    அப்போது, அங்குள்ள மின் கம்பத்திலிருந்து மின் கம்பி துண்டாகி தண்ணீர் தொட்டியில் விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து விக்னேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இந்த சம்பவம் குறித்து மகாராஜகடை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தண்ணீர் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ×