search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடை மாற்றும்போது வீடியோ எடுத்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை Take video while changing clothes and sexually harass the woman"

    அரக்கோணம் அருகே உடை மாற்றும்போது வீடியோ எடுத்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வாலிபரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ராணிப்பேட்டை: 

    ராணிப்பேட்டை மாவட்டம் குருவ ராஜபேட்டையை சேர்ந்த 32 வயது இளம்பெண் வாலிபர் ஒருவர் தன்னை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக  அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். 

    அவர் கூறியதாவது; நான் குருவராஜப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கூலி வேலை செய்து வருகிறேன். வேலைக்கு செல்லும் இடத்தில் திருத்தணியை சேர்ந்த 24 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
     அவர் என்னை அக்கா என்று அழைத்ததால் நம்பி அவருடன் பழகி பேசி வந்தேன்.

     இந்த நிலையில் வேலை செய்யும் இடத்தில் உடை மாற்றும் போது என்னை செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார்.

     அதை வைத்துக் கொண்டு அவன் அழைக்கும் இடத்திற்கு என்னை வரும்படி  மிரட்டி பாலியல் தொல்லை செய்து வருகிறார்.மேலும் என்னுடைய வீட்டிற்கு வந்து கணவர் மற்றும் குழந்தைகளை கொலை செய்வதாக மிரட்டினார்.

     என் மகனை தூக்கி சென்று என்னை மிரட்டி வர வைக்கிறார். அடித்து துன்புறுத்தி பணம் பறிக்கிறார்.வாலிபர் மீது நடவடிக்கை எடுத்து எனக்கும் எனது குடும்பத்துக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×