search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coimbatore news கோவை செய்திகள்"

    கோவையில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
    கோவை, 
    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மானூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 51). 
     கட்டிட தொழிலாளி. இவர் கோவை சூலூரில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் சேலம்- பாலக்காடு ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஆறுமுகம் மீது ேமாதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். 
    இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
     
    வேலாண்டிபாளையம் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் மோகன் (60). சம்பவத்தன்று இவர் இடையர்பாளையம்- வ.உ.சி. நகர் கட் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மோகன் பரிதாபமாக இறந்தார்.
     இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மரணம் அடைந்தார்.
    கோவை, 
    கோவை பேரூர் அருகே உள்ள மாதம்பட்டி காளிகை தோட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணபாண்டி (வயது 33). விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி மணி பிரியா. இவர்களுக்கு ஒரு மகன்,ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.சம்பவத்தன்று கிருஷ்ணபாண்டி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். மேலும் மது பழக்கத்தை கைவிடுமாறு அறிவுரை கூறினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணபாண்டி  தனது மனைவியிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் ேதாட்டத்தில் உள்ள கிணற்றின் சுவரில் அமர்ந்து இருந்தார். அப்போது மது போதையில் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இந்த தகவல் கிடைத்ததும் பேரூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கிணற்றில் இருந்து கிருஷ்ண பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    காரமடை அருகே 6 வயது சிறுமி திடீரென பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கோவை, 
    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் சுந்தரலிங்கம். டி.வி. மெக்கானிக்.  இவரது மகள் கவிஸ்ரீ (வயது 6).
     
     இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகள் விடுமுறை என்பதால் கவிஸ்ரீ கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள சின்னபுதூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்து இருந்தார். சம்பவத்தன்று சிறுமி வீட்டு முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார்.
     
     அப்போது திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதனை பார்த்த அவரது பாட்டி உடனடியாக சிறுமியை மீட்டு காரமடை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு கவிஸ்ரீக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். 
    இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    கோவை சரவணம்பட்டியில் இளம்பெண்ணை ஒரு கும்பல் தாக்கியது.
    கோவை, 
    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் சக்திவேல் ( வயது 21). இவர் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்தார். 
     
    பின்னர் படிப்பை பாதியில் நிறுத்திய இவர் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கி இருந்து அருப்புக் கோட்டையைச் சேர்ந்த  தனது நண்பர்கள் முருகமணி ,கணேஷ், சந்துரு, கமலேஷ் ஆகியோருடன் சேர்ந்து வேலை தேடி வந்தார். 
    இந்நிலையில் கடந்த 28-ந் தேதி இரவு 10 மணி அளவில் சக்திவேல் தனது நண்பர்களுடன் சரவணம்பட்டி- துடியலூர் சாலையில் உள்ள மெடிக்கல்  கடைக்கு மருந்து வாங்குவதற்காக சென்றார். 
     
    அப்போது அங்கு ஒரு இளம் பெண்ணை 3 வாலிபர்கள் தடுத்து நிறுத்தி அவரை கைகளால் தாக்கிக் கொண்டிருந்தனர்.  அந்த இளம்பெண் அழுதபடி இருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக்திவேலும் அவரது நண்பர்களும் அந்த இளம்பெண்ணை தாக்கிய வாலிபர்களை தட்டி கேட்டனர். 
    அப்போது அந்த வாலிபர்கள் மது போதையில் இருந்தனர். தொடர்ந்து சக்திவேலும் அவரது நண்பர்களும் சத்தம் போடவே அந்த இளம்பெண்ணை விட்டுவிட்டு வாலிபர்கள் அங்கிருந்து  தப்பிச் சென்று விட்டனர். சம்பவத்தன்று இரவு சக்திவேல் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்தார். 
     
    அப்போது ஏற்கனவே சக்திவேல் மற்றும் அவரது நண்பர்களிடம் தகராறில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் மேலும் 4 பேரை அழைத்துக்கொண்டு வந்து சக்திவேலை அடையாளம் காட்டினர். தொடர்ந்து இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில்  அந்த வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளை எடுத்து சக்திவேலை வெட்ட முயன்றனர். அப்போது அவர் தடுக்க முயன்றார். 
     
    அப்போது தலை மற்றும் வலது கை , தோள்பட்டையில் அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டுக்காயம் ஏற்பட்டு சக்திவேல் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவர் உடன் வந்திருந்த முருகமணி, கணேஷ் ஆகியோர் தடுக்க முயன்ற போது அவர்களுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. 
    இதில் அவர்களுக்கு கைகள் மற்றும் முதுகில் வெட்டு விழுந்தது. அப்போது அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்தது. பின்னர் அந்த ஏழு பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். 
     இந்த தகவல் கிடைத்ததும்  சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரிவாள் வெட்டு மற்றும் கத்தி குத்தில் காயம் அடைந்த சக்திவேல் மற்றும் அவரது நண்பர்களை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில்   சேர்த்தனர்.  பின்னர் பலத்த காயமடைந்த முருகமணி, கணேஷ் ஆகியோரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல் மற்றும் அவரது நண்பர்களை அரிவாளால் வெட்டிய ஏழு பேர் கொண்ட மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.

    தனியார் நிறுவன ஊழியரிடம் பணம், செல்போன் பறிக்கப்பட்டது.
    கோவை, 
    விருதுநகர் மாவட்டம் பாளையம்பட்டி அருகே உள்ள வேல்முருகன் காலனியை சேர்ந்தவர் செல்வகணேஷ் (வயது 22). இவர் கோவை ஈச்சனாரி மார்க்கெட் ரோட்டில் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் செட்டிப்பாளையத்தில் உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு அறைக்கு திரும்பினார். வரும் வழியில் மோட்டார் சைக்கிளை கணேசபுரம் அருகே நிறுத்து விட்டு உடல் உபாதை கழிப்பதற்காக சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிள் அருகே 3 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் செல்வகணேசை கத்தியை காட்டி மிரட்டில் அவரிடம் இருந்து ரூ. 4,800 ரொக்க பணம், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து அவர் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன ஊழியரை மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள். 

    ×