search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியமனம்"

    • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்ப டுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது.
    • அதன்படி சேலம் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பா ளராக காந்திமதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    சேலம்:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின்

    27வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை

    உறுதி சட்டத்தை செயல்ப டுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பா ளராக காந்திமதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார் ஏதும் இருப்பின் மேற்கண்ட குறைதீர்ப்பாளரின் தொலைபேசி மற்றும் slmombuds@gmail.com மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

    மேலும், அவரை அறை

    எண்.211, 2-ம் தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், சேலம்-636001 என்ற முகவரியில் நேரிலும் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர் மாவட்ட புதிய பா.ஜ.க. நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    விருதுநகர்

    விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாரதீய ஜனதாவின் மாநிலத்தலைவர் அண்ணாமலை, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், பொதுச் செயலாளர் பால கணபதி, மாவட்ட பார்வையாளர் வெற்றி செல்வன் ஆகியோரின் ஒப்புதலின்படி விருதுநகர் மாவட்டத்தில் புதிய பா.ஜ.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

    அதன்படி விருதுநகர் கிழக்கு மாவட்ட மாவட்ட துணைத்தலைவர்களாக ராஜ்குமார், ராமஜெயம், ராஜேஸ்வரி, சங்கரேஸ்வரி, குமரேசன், முருகன், மாவட்ட பொதுச் செயலாளர்களாக ராஜா, அழகர்சாமி, சீத்தாராமன், மாவட்டச் செயலாளர்களாக சத்தியபாலன், காளீஸ்வரி, கவுரி, முருகன், பால முருகன், சிவா, மாவட்ட பொருளாளராக புஷ்ப குமார் நியமிக்கப்பட்டுள்ள னர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    ×