என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » surandai ration rice seized
நீங்கள் தேடியது "Surandai ration rice seized"
சுரண்டை அருகே 370 கிலோ ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சுரண்டை:
சுரண்டை பகுதிகளில் ரேசன் அரிசி சட்டவிரோதமாக பதுக்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வீரகேரளம்புதூர் தாசில்தார் நல்லையா தலைமையில் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் சுமதி, கிராம உதவியாளர் அந்தோணி ஆகியோர் அடங்கிய குழு பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர்.
வீரகேரளம்புதூரை அடுத்த கலிங்கப்பட்டியில் சோதனை நடத்தியபோது அதே ஊரை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர் வீட்டில் சுமார் 370 கிலோ ரேஷன் பச்சரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவை அரசு குடோனுக்கு அனுப்பப்பட்டன.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X