search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Surandai ration rice seized"

    சுரண்டை அருகே 370 கிலோ ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    சுரண்டை:

    சுரண்டை பகுதிகளில் ரேசன் அரிசி சட்டவிரோதமாக பதுக்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வீரகேரளம்புதூர் தாசில்தார் நல்லையா தலைமையில் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் சுமதி, கிராம உதவியாளர் அந்தோணி ஆகியோர் அடங்கிய குழு பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர்.

    வீரகேரளம்புதூரை அடுத்த கலிங்கப்பட்டியில் சோதனை நடத்தியபோது அதே ஊரை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர் வீட்டில் சுமார் 370 கிலோ ரே‌ஷன் பச்சரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவை அரசு குடோனுக்கு அனுப்பப்பட்டன.

    ×