search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sivakasi town police investigaiton"

    பழைய கார் வியாபாரி வீட்டில் மர்ம மனிதர்கள் புகுந்து ரூ. 6 லட்சத்து 30 ஆயிரம் மற்றும் நகையை கொள்ளையடித்துச் சென்றனர்.
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஜெயா நகரைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 36). பழைய கார்களை வாங்கி விற்று வருகிறார்.

    நேற்று இவர் குடும்பத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூர் தேவாலயத்திற்கு சென்று விட்டார். மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் வீடு முழுவதும் சிதறிக் கிடந்தன.

    இது குறித்து சிவகாசி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது பீரோவில் இருந்த ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் மற்றும் 1½ பவுன் நகை கொள்ளை போயிருப்பதாக ஸ்டீபன் தெரிவித்தார்.

    பீரோவை பூட்டாமல் சாவியை வைத்துச் சென்றது கொள்ளையர்களுக்கு வசதியாகி விட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    கார் வியாபாரியான ஸ்டீபன் அடிக்கடி பணத்தை வீட்டில் வைப்பதும், பின்னர் அதனை தொழிலுக்காக எடுத்துச் செல்வதும் தெரிந்தே மர்ம மனிதர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ×