search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivakasi cracker factory"

    சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அறை சேதமானது. 2 தொழிலாளிகள் பலத்த காயடைந்தனர்.
    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள ஜமீன் தல்வார்பட்டியில் ஜான் பாக்கியராஜ் என்பவர் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 35-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இன்று காலை பணிக்கு வந்த தொழிலாளர்கள், மருந்து கலவை தயாரிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அறையில் உராய்வின் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் அந்த அறை இடிந்து சேதமானது. அங்கு பணியில் இருந்த பள்ளப்பட்டி ஆரோக்கியராஜ் (வயது 37), பம்புவிட்டான்சந்தை முருகன் (45) ஆகியோர் பலத்த காயம் அடைந்த னர். அவர்கள் சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலைக்கு சிவகாசி தாசில்தார் பரமானந்தராஜா மற்றும் போலீசார் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
    ×