search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "siva subramaniya swami"

    கடலூர் புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணியசுவாமி கோவிலில் வசந்த விழா நாளை மறுநாள் தொடங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    கடலூர் புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்ட நகரில் சிவசுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாத விசாக வசந்த விழா நாளை மறுநாள்(சனிக்கிழமை) தொடங்குகிறது.

    இதையொட்டி நாளை மறுநாள் முதல் 28-ந் தேதி வரை தினமும் மாலை 5 மணிக்கு வள்ளி, தெய்வானை உடனுறை சிவசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். பின்னர் தென்சுற்று மண்டபத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள பொன் ஊஞ்சலில் வள்ளி, தெய்வானை உடனுறையுடன் சிவசுப்பிரமணியசுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிப்பார். அங்கு திருமுறைகள் ஓதி, அர்ச்சனை செய்து தீபாராதனை காண்பிக்கப்படும்.

    28-ந் தேதி வைகாசி விசாகத்தையொட்டி சிவசுப்பிரமணிய சுவாமிக்கு காலை 7 மணிக்கு மகா அபிஷேகமும், 9 மணிக்கு சுவாமி வீதி உலாவும், மதியம் 12 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை செங்குந்த மரபினர்கள் செய்து வருகின்றனர். 
    ×