என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » secretary general
நீங்கள் தேடியது "secretary general"
இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராக அமர் தேவுலப்பள்ளி மற்றும் பொதுச்செயலாளராக சபினா இந்திரஜித் ஆகியோர் இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். #IJUpresident
ஐதராபாத்:
புதுடெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
வேட்பு மனுக்களை திரும்பப்பெற இன்று (28-ம் தேதி) மாலை 3 மணி இறுதி நேரம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு அமர் தேவுலப்பள்ளி மற்றும் பொதுச்செயலாளராக சபினா இந்திரஜித் ஆகியோர் மட்டுமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இவர்களை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடாததால் இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராக அமர் தேவுலப்பள்ளி மற்றும் பொதுச்செயலாளராக சபினா இந்திரஜித் ஆகியோர் இன்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி பிரேம்நாத் பார்கவா இன்று அறிவித்துள்ளார்.
தலைவராக தேர்வாகியுள்ள அமர் தேவுலப்பள்ளி ஐதராபாத் நகரை சேர்ந்தவர். கடந்த 40 ஆண்டுகளாக பத்திரிகையாளராக பணியாற்றிவரும் இவர், முன்னர் ஆந்திர மாநில பத்திரிகை கழகத்தின் தலைவராக இரு முறையும், ஆந்திர மாநில உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராக முன்னர் ஒரு முறையும் பதவி வகித்துள்ளார்.
தற்போது, சாக்ஷி நாளிதழின் கவுரவ ஆசிரியராக பணியாற்றும் அமர் தேவுலப்பள்ளி இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் துணை பொதுச்செயலாளராகவும் உள்ளார்.
பொதுச்செயலாளராக இன்று தேர்வாகியுள்ள மூத்த பத்திரிகையாளர் சபினா இந்திரஜித் டெல்லியை சேர்ந்தவர். INFA என்ற செய்தி நிறுவனத்தின் இணையாசிரியராக பணியாற்றி வருகிறார்.
தற்போது, இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் துணை தலைவராக பொறுப்பு வகிக்கும் இவர், முன்னர் டெல்லி பத்திரிகையாளர் சங்க துணை தலைவராகவும், புருசெல்ஸ் நகரை மையமாக கொண்டு செயல்படும் சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினராக 4 முறையும், இந்திய பத்திரிகை கவுன்சில் உறுப்பினராக இரு முறையும் பதவி வகித்துள்ளார்.
விரைவில் நடைபெறும் இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் ஆண்டுவிழாவின்போது இவர்கள் பதவி ஏற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு தற்போதைய தலைவர் எஸ்.என்.சின்ஹா, பொதுச்செயலாளர் கே.ஸ்ரீனிவா ரெட்டி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #IJUpresident
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X