search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SDPI PARTY PROTEST"

    • பாபர் மசூதி இடிப்பை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
    • ஜமாத்துல் உலமா சபையின் திருச்சி மாவட்ட பொருளாளர் அமீன் யூசுபி உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்

    திருச்சி:

    பாபர் மசூதி இடிப்பை கண்டித்து நேற்று திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட பொது செயலாளர் தமீம் அன்சாரி வரவேற்றார். தெற்கு மாவட்ட செயலாளர்கள் ஏர்போர்ட் மஜீத், மதர் ஜமால் முஹம்மது, மாவட்ட செய்தி தொடர்பாளர் பக்ருதீன், தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அப்பாஸ்,

    பொன்னகர் ரபீக், மர்சூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கட்சியின் மாநில பொது செயலாளர் அஹமது நவவி, நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை. துரை முருகன்,

    ஜமாத்துல் உலமா சபையின் திருச்சி மாவட்ட பொருளாளர் அமீன் யூசுபி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் அப்பாஸ் மந்திரி, கிழக்கு தொகுதி தலைவர் அப்துல் காதர், வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் அப்துல் மாலிக், முஸ்தபா, மருத்துவர் அணி தலைவர் இக்பால், சுற்றுச் சூழல் அணி தலைவர் ரஹ்மதுல்லா, தொண்டரணி தலைவர் டோல்கேட் அன்சாரி, விம் மாவட்ட தலைவர் மூமினா பேகம் பெண்கள் உட்பட 600-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    ×