search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sapling ceremony"

    • திருச்சி மண்டல ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படையின் சார்பில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது
    • அந்த வகையில் மரம் நடு விழா காஜா மலையில் உள்ள சிறப்பு காவல் படை வளாகத்தில் நடைபெற்றது.

    திருச்சி :

    திருச்சி மண்டல ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படையின் சார்பில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இருசக்கர வாகன பேரணி விழிப்புணர்வு ஓட்டம் உள்ளிட்ட வகையில் சுதந்திர தினத்தை அறியும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வந்தனர்.

    அந்த வகையில் மரம் நடு விழா காஜா மலையில் உள்ள சிறப்பு காவல் படை வளாகத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி மண்டல ரயில்வே துணை மண்டல மேலாளர் மனிஷ் அகர்வால் கலந்துகொண்டு மரம் நடு விழாவை துவக்கி வைத்தார்.

    இந்த நிகழ்வில் ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டன்ட் அஜய் ஜோதி ஷர்மா உள்ளிட்ட அதிகாரிகள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

    ×