search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Royapettah ATM machine"

    ராயப்பேட்டை பாரதி சாலையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    ராயப்பேட்டை பாரதி சாலையில் அமீர்மகால் எதிரில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது.

    இந்த ஏ.டி.எம். மையத்தில் நேற்று நள்ளிரவு வாலிபர் ஒருவர் எந்திரத்தை உடைத்தார். இதனையடுத்து வங்கி கட்டுப்பாட்டு அறையில் உள்ள அலாரம் அடித்தது. இதுபற்றி வங்கி நிர்வாகத்தினர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அண்ணாசாலை போலீசார் விரைந்து சென்றனர்.

    ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரது பெயர் சேக்சுலைமான் பாஷா என்பது தெரிய வந்தது. கல்லூரி மாணவரான அவரிடம் விசாரணை நடை பெற்று வருகிறது.

    ×