search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rowdy gang arrest"

    தண்டையார்பேட்டையில் 20 அரிவாள்களுடன் ரவுடி கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    சென்னையில் ரவுடி கும்பலை ஒழிக்க போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ரவுடிகளை கைது செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் வண்ணாரப்பேட்டை துணை கமி‌ஷனர் ரவளி பிரியா மேற்பார்வையில் தனிப்படை போலீசார் தண்டையார்பேட்டை மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் கொருக்குப்பேட்டை திருநாவுக்கரசு தோட்டம் பகுதி லட்சுமணன் என்பது தெரிந்தது. மேலும் மோட்டார் சைக்கிளில் அரிவாளை மறைத்து வைத்திருந்தார். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட லட்சுமணன் கடந்த 2017-ம் ஆண்டு தண்டையார்பேட்டையில் நடந்த ஒரு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார். இதைத் தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் கூட்டாளிகள் மேலும் 3 பேர் மேல்மலையனூரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வீட்டில் பதுங்கி இருந்த 3 வாலிபர்கள் தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்தனர். அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பாபு என்கிற பிரபாகரன், கோவிந்தராஜ், ராஜ்குமார் என்பது தெரிந்தது.மேலும் வீட்டில் மறைத்து வைத்திருந்த 20 வீச்சரிவாள்களை பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட 4 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளதால் அவர்கள் முக்கிய பிரமுகர்களை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டி பதுங்கி இருந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக கைதான 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 20 அரிவாள்களுடன் ரவுடி கும்பல் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews

    ×