search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "relief supplies. கேரளா தென்மேற்கு பருவமழை"

    வேலூர் மாவட்ட போலீசார் சார்பில் ரூ.50 லட்சம் நிவாரண பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
    வேலூர்:

    கேரளா பலத்த மழையால் வெள்ளக்காடாக மாறியதால் பல லட்சம் பேர் வீடுகளை இழந்து உணவு, உடைகளின்றி தவிக்கின்றனர். கேரள மாநில மக்களின் துயர் துடைக்க வேலூர் மாவட்டத்தில் பல அமைப்புகள், அரசு மற்றும் தனியார் அமைப்புகள் என பல்வேறு தரப்பில் இருந்தும் லட்சக்கணக்கில் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்ட காவல் துறை சார்பில் கேரளாவுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் திரட்டப்பட்டன.

    இதனை கலெக்டர் ராமன், மற்றும் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் இன்று எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து 2 லாரிகளில் கேரளாவுக்கு அனுப்பி வைத்தனர்.

    நிவாரண பொருட்களுடன் 2 போலீசாரும் அனுப்பி வைக்கப்பட்டனர். பொருட்கள் சென்று சேர்ந்த பிறகு, போலீசார் வேலூருக்கு திரும்புவார்கள். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
    ×