search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rameswaram temple"

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடித்திருவிழா நாளை (சனிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (சனிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    திருவிழா குறித்து கோவில் இணை ஆணை யர் மங்கையற்கரசி கூறிய தாவது:-

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் ஆடிமாதத்தில் ஆடித்திருவிழா நடை பெறும்.இந்த ஆண்டிற்கான திருவிழா நாளை (4-ந் தேதி) சனிக்கிழமை காலை பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடி மரத்தில் காலை 10.11 மணி முதல் 12 மணிக்குள் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கபட உள்ளது.

    17 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான 11-ந் தேதி அமாவாசையை முன்னிட்டு சுவாமி அம்மன் எழுந்தருளி அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சியும், வருகிற 12-ந் தேதி பர்வதவர்த்தினி அம்மன் தேரோட்டம் நிகழ்ச்சியும், 14-ந் தேதி சுவாமி, அம்மன் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், 15-ந் தேதி இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கும் கோவில் தெற்கு பகுதியிலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    திருவிழாவை முன் னிட்டு 17 நாட்களும் சுவாமி அம்மன் தினசரி ஒவ்வொரு வாகனத்தில் அலங் காரத்துடன் எழுந்தருளி 4 ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண மண்டபத்தில் தினசரி இரவு ஆன்மிக இன்னிசை நிகழ்ச்சிகளும்,ஆன்மிக பட்டிமன்றங்கள் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார்.
    ராமேசுவரம் கோவில் தல வரலாற்றை நினைவுகூரும் ராமலிங்க பிரதிஷ்டை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    இலங்கைக்கு சீதையை கவர்ந்து சென்ற ராவணனை வதம் செய்ததால் ராமபிராமன் பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவலிங்கத்தை வழிபாடு செய்த ராமேசுவரம் கோவில் தல வரலாற்றை நினைவு கூரும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    அதுபோல் இந்த ஆண்டின் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கடந்த 20-ந் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெற்றது. அதற்காக கோவிலின் சாமி சன்னதியில் உள்ள விசுவநாதர் சன்னதி முன்பு 2 பெரிய கலசத்திலும் 11 சிறிய கலசத்திலும் புனித நீர் வைக்கப்பட்டு சிறப்பு பூஜையும் யாகமும் நடை பெற்றது.அதன்பின் புனித தீர்த்தத்தால் கருவறையில் உள்ள சாமிக்கு மகா அபிஷேகம் நடை பெற்றது.

    தொடர்ந்து விசுவநாதர் சன்னதியில் இருந்து கோவில் குருக்கள் சந்தோஷ் ஆஞ்சநேயர் வேடமிட்டபடி கையில் சாமி விக்ரகத்துடன் ஆக்ரோஷமாக முதல் பிரகாரத்தில் ஆடி வந்து கருவறை சன்னதி முன்பு மண்டியிட சாமி விக்ரகம் கருவறையில் உள்ள சிவலிங்கம் அருகே வைக்கப்பட்டது.

    அதன்பின் கருவறையில் உள்ள ராமநாதசாமிக்கு பால், பன்னீர், திரவியம், தேன், மா, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை பொருட்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்திற்குபின் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை பூஜை நடை பெற்றது.

    ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவில் கோவில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், ஆணையர் பாலசுப்பிரமணியன், சூப்பிரண்டு ககாரின்ராஜ், பேஷ்கார்கள் கலைச்செல்வ ண்ணன், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் திலகராணி, பா.ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் முரளிதரன், நகர் தலைவர் ஸ்ரீதர், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன், முன்னாள் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து இரவு 8 மணிக்கு சாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பஞ்ச மூர்த்தி களுடன் கோவிலின் 4 ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவையொட்டி கோவிலின் சாமி சன்னதியில் பக்தர்கள் தரிசனம் செய்யும் பகுதி முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப் பட்டிருந்தது.
    ராமேசுவரம் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 70 லட்சத்திற்கும் மேலாக வருவாயாக கிடைத்தது.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகள் ஆகிய சன்னதியில் முன்புள்ள உண்டியல்கள் மற்றும் கோவிலுக்கு சொந்தமான நம்புகோவில் உள்பட உபகோவில்களில் உள்ள உண்டியல்கள் அனைத்தும் திறக்கப்பட்டது.

    பின்னர் பக்தர்களால் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட இந்த பணத்தை கோவில் கல்யாண மண்டபத்தில் கொண்டுவரப்பட்டது. அங்கு இணை ஆணையர் மங்கையர்க்கரசி,சிவகங்கை அறநிலைய்த்துறை அலுவலக இணை ஆணையர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டது.

    இதில் ரொக்கப்பணம் ரூ. 72 லட்சத்து 27 ஆயிரத்து 307 ரூபாயும், தங்கம் 135 கிராமும், வெள்ளி 4 கிலோ 150 கிராம் காணிக்கையாக கிடைத்தது.

    உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், உதவி கோட்ட பொறியாளர் மயில் வாகனன், கண்காணிப்பாளர் ககாரீன்ராஜ், பாலசுப்பிரமணியன், நேர்முக உதவியாளர் கமலநாதன், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கலை செல்வன், கண்ணன், செல்லம், அலுவலர்கள் பழனிமுருகன், முனியசாமி, சிவபுத்திரன்,ராமநாதன், சிவவடிவேல், தபேதார் முத்துக்குமார்,மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.
    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது.
    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது. இது குறித்து கோவில் இணை ஆணையர் மங்கையற்கரசி கூறியதாவது:-

    3 நாட்கள் நடைபெறும் பிரதிஷ்டை திருவிழாவின் முதல் நாள் விழா 20-ந் தேதி தொடங்கிறது. மாலை 6 மணிக்கு ராமேசுவரம திட்டக்குடி பகுதியில் 10 தலையுடன் கூடிய ராவணனின் தலையை ராமபிரான் சம்ஹாரம் செய்யும் நிகழச்சி நடைபெறும்.

    2-ம் நாள் நிகழ்ச்சியாக 21-ந் தேதி தனுஷ்கோடி செல்லும் பகுதியில் அமைந்துள்ள கோதண்டராமர் கோவிலில் பகல் 1 மணிக்கு இலங்கை மன்னரான ராவ ணனின் தம்பி விபிஷ்ணருக்கு ராமபிரான் பட்டாபிஷேகம் செய்யும் நிகழச்சி நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடைசி நாளான 22-ந் தேதி கோவிலில் அமைந்துள்ள காசிவிசுவநாதர் சன்னதியில் இருந்து மூத்த குருக்கள் வெண்கலத்தால் அமைக்கப்பட்ட சிவலிங்கத்தை சுமந்த படி கோவிலின் முதல் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து சுவாமி கருவறையில் சிவலிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்வார். சிறப்பு பூஜைகளுடன் ராமலிங்கப்பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவிக் கோட்ட பொறியாளர் மயில்வாகணன், கண்காணிப்பாளர்கள் ககாரீன்ராஜ், பாலசுப்பிரமணியன், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    ×