search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமேசுவரம் கோவில் ஆடித்திருவிழா  நாளை தொடங்குகிறது
    X

    ராமேசுவரம் கோவில் ஆடித்திருவிழா நாளை தொடங்குகிறது

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடித்திருவிழா நாளை (சனிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (சனிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    திருவிழா குறித்து கோவில் இணை ஆணை யர் மங்கையற்கரசி கூறிய தாவது:-

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் ஆடிமாதத்தில் ஆடித்திருவிழா நடை பெறும்.இந்த ஆண்டிற்கான திருவிழா நாளை (4-ந் தேதி) சனிக்கிழமை காலை பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடி மரத்தில் காலை 10.11 மணி முதல் 12 மணிக்குள் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கபட உள்ளது.

    17 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான 11-ந் தேதி அமாவாசையை முன்னிட்டு சுவாமி அம்மன் எழுந்தருளி அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சியும், வருகிற 12-ந் தேதி பர்வதவர்த்தினி அம்மன் தேரோட்டம் நிகழ்ச்சியும், 14-ந் தேதி சுவாமி, அம்மன் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், 15-ந் தேதி இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கும் கோவில் தெற்கு பகுதியிலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    திருவிழாவை முன் னிட்டு 17 நாட்களும் சுவாமி அம்மன் தினசரி ஒவ்வொரு வாகனத்தில் அலங் காரத்துடன் எழுந்தருளி 4 ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண மண்டபத்தில் தினசரி இரவு ஆன்மிக இன்னிசை நிகழ்ச்சிகளும்,ஆன்மிக பட்டிமன்றங்கள் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார்.
    Next Story
    ×