என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » raction rice
நீங்கள் தேடியது "raction rice"
ஆந்திராவில் இருந்து 2 ஆயிரத்து 600 டன் ரேஷன் அரிசி நெல்லைக்கு வந்தது.
நெல்லை:
ஆந்திராவில் இருந்து 2 ஆயிரத்து 600 டன் ரேஷன் அரிசி நெல்லைக்கு வந்தது. இங்கிருந்து நெல்லை உள்பட தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ரேஷன் அரிசி சரக்கு ரெயில் மூலம் நெல்லைக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த அரிசி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அங்குள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. பின்னர் அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தேவைக்கு ஏற்ப வெளிமாநிலங்களில் இருந்து ரேஷன் அரிசி கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயில் மூலம் ரேஷன் அரிசி நெல்லைக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.
சுமார் 50 ரெயில் பெட்டிகளில் அரிசி வந்தது. ஒவ்வொரு பெட்டியிலும் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
ஒரு மூட்டைக்கு 50 கிலோ அரிசி இருந்தது. மொத்தம் 2 ஆயிரத்து 600 டன் ரேஷன் அரிசி கொண்டு வரப்பட்டது.
இந்த அரிசி மூட்டைகள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
நெல்லை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள், நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் அடுக்கி வைக்கப்பட்டன.
ஆந்திராவில் இருந்து 2 ஆயிரத்து 600 டன் ரேஷன் அரிசி நெல்லைக்கு வந்தது. இங்கிருந்து நெல்லை உள்பட தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ரேஷன் அரிசி சரக்கு ரெயில் மூலம் நெல்லைக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த அரிசி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அங்குள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. பின்னர் அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தேவைக்கு ஏற்ப வெளிமாநிலங்களில் இருந்து ரேஷன் அரிசி கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயில் மூலம் ரேஷன் அரிசி நெல்லைக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.
சுமார் 50 ரெயில் பெட்டிகளில் அரிசி வந்தது. ஒவ்வொரு பெட்டியிலும் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
ஒரு மூட்டைக்கு 50 கிலோ அரிசி இருந்தது. மொத்தம் 2 ஆயிரத்து 600 டன் ரேஷன் அரிசி கொண்டு வரப்பட்டது.
இந்த அரிசி மூட்டைகள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
நெல்லை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள், நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் அடுக்கி வைக்கப்பட்டன.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X