search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Purity India Awareness Camp"

    சிந்தாமணி கிராமத்தில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    பெரம்பலூர் மாவட்ட நீர்வடி பகுதி மேம்பாட்டு முகமை சார்பில், அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் சிந்தாமணி கிராமத்தில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மகளிர் சுயஉதவிக்குழுவின் கோப்புகள் பராமரிப்பு கணக்காளர் முத்தழகி தலைமை தாங்கினார். அங்கன்வாடி குழந்தைகள் காப்பாளர் கனிமொழி முன்னிலை வகித்தார்.

    நீர்வடி பகுதி வளர்ச்சி அணி உறுப்பினர் மற்றும் சமூகவியலர் பீமா ராமலிங்கம் தூய்மை இந்தியா விழிப்புணர்வு முகாம் குறித்து பேசுகையில், வீட்டை நாம் சுத்தமாக வைத்து கொள்வது போல், நமது கிராமத்தையும், நகரத்தையும் தூய்மையாக வைத்திருந்தால் மட்டுமே இந்தியாவின் தூய்மை நிவர்த்தி அடையச் செய்திட முடியும் என்றார். தொடர்ந்து தூய்மை இந்தியா குறித்த உறுதிமொழி எடுத்து கொண்டனர். முகாமில் சிந்தாமணி கிராமத்தை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×