search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Petrol Bombing Case"

    • சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு கருக்கா வினோத் யாருடன் தொடர்பில் இருந்தார் என விசாரணை.
    • கருக்கா வினோத் தங்களிடம் தொடர்பில் இல்லை என குடும்பத்தினர் தகவல்.

    சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பாதுகாப்பு மிகுந்த ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக, தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடி கருக்காக வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கருக்கா வினோத்தின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில், சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு கருக்கா வினோத் யாருடன் தொடர்பில் இருந்தார் உள்ளிட்ட விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    அப்போது, சிறையில் இருந்தபோது தன்னை ஏன் சந்திக்கவில்லை என்று கருக்கா வினோத் சண்டையிட்டதாகவும், கருக்கா வினோத் தங்களிடம் தொடர்பில் இல்லை என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    ×