search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panchayat association"

    • திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • தமழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி மன்றத்துக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு சங்க ஆலோசனைக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு கூட்டமைப்பு சங்க தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் நாகராஜ், பொருளாளர் வளர்மதி பிச்சைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி மன்ற தலைவர்களின் சம்பள ஊதியத்தை உயர்த்தி வழங்கியதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வத்தலக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முக்கிய தீர்மானங்களாக வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை வழங்கினால் மட்டுமே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடியும் என்றும், மக்களின் குறைகளை ஊராட்சி மன்ற தலைவர்கள் கேட்டறிந்து மாதத்திற்கு ஒருமுறை ஆலோசனை கூட்டம் நடத்தி மாவட்ட கலெக்டர் பார்வைக்கு கொண்டு சென்று ஊராட்சி மன்றத்தில் உள்ள குறைகளை சரி செய்ய வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்மர், கோவிந்தராஜ், மொக்கையதேவர், ஜெயபால், ஜெயப்பிரியா நடராஜன், யசோதை முருகேசன், வனிதா மாணிக்கம், வசந்தா மணிவண்ணன், காமாட்சிகென்னடி, மகேஸ்வரி, மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×