search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MP ADMK won"

    • எம்.பி. தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • விவசாய அணி காமாட்சி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கேட்டுகடையில் அ.தி.மு.க. சார்பில் 2024 பாராளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகர் செயலாளர் அழகுராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், கருப்பையா, மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், பாசறை மாவட்ட இணை செயலாளர் உமேஷ் சந்தர், மகளிரணி மாவட்ட செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், வர இருக்கும் 2024 பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். தி.மு.க. பொய் வாக்குறுதிகளை கொடுத்து அதை நிறை வேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. வருகிற தேர்தலில் தி.மு.க.விற்கு வாக்காளர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் பால கிருஷ்ணன், ஒன்றிய துணைச்செயலாளர் சம்பத், மகளிரணி செயலாளர் லதா, எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட இணை செய லாளர் ஜெயச்சந்திர மணியன், ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, பேரூ ராட்சி கவுன்சிலர் நாட்டாமை சுந்தர், விவசாய அணி காமாட்சி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

    ×