search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "medial owner"

    திருத்துறைப்பூண்டியில் ரூ.2 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மருந்துக்கடைக்காரருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பெரிய சிங்களாந்தி தமிழர் தெருவை சேர்ந்தவர் மாதவன் (37). வேன் டிரைவர். இவரிடம் வித்வான் மானைக்கால் பகுதியை சேர்ந்த மருந்துக் கடை உரிமையாளரான விஜயகுமார் ரூ.2 லட்சம் கடனாக பெற்றார். அதற்கு திருத்துறைப்பூண்டி ஐ.ஓ.பி. வங்கி செக் ஒன்றை கொடுத்தார். அதனை மாதவன் வங்கியில் செலுத்திய போது பணமில்லாமல் திரும்பி வந்தது.

    இதுகுறித்து மாதவன் திருத்துறைப்பூண்டி விரைவு நீதிமன்றத்தில் விஜயகுமார் செக் கொடுத்து மோசடி செய்ததாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

    விரைவு நீதிமன்ற நீதிபதி கண்ணன் வழக்கை விசாரித்து விஜயகுமாருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் ரூ.2 லட்சத்தை ஒரு மாதத்தில் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றும் உத்தர விட்டார்.

    ×