search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lawyers association"

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தலைவர் தெவிரித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தலைவர் சத்தியசீலன் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் மக்கள் நலத்திட்டங்களை வரவேற்கிறோம். சேலம்-சென்னை 8 வழிச்சாலை, குமரி மாவட்ட துறைமுக திட்டம் போன்றவற்றுக்கு எதிராக மக்களை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வக்கீலுக்கு படித்துவிட்டு நீதிபதிக்கான தேர்வு எழுதி நீதிபதியாக வருபவர்கள் ஒரு வருடமாவது கிழமை நீதிமன்றங்களில் பணியாற்றிய பிறகு நீதிபதியாக நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது ஆண்ரூஸ்ஜெரோம், விக்டர்ரெக்ஸ், பிரபு, குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.
    ×