search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Krishnagiri accident"

    • இரண்டு வாகனங்களின் முன்பக்க பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
    • விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த வெப்பாலம்பட்டி கிராமம் அருகே இன்று காலை தனியார் பள்ளி பேருந்து மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த எருமியாம்பட்டி கல்லூரி பேருந்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் இரண்டு வாகனங்களின் முன்பக்க பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது பற்றி ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் படுகாயம் அடைந்த 30-க்கும் மேற்பட்டோரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். லேசான காயத்துடன் மாணவர்கள் உயிர்தப்பினர்.

    இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தில் சிக்கிய பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுனர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணம் முடிந்து ஆறு நாட்களே ஆன நிலையில் புதுமண தம்பதிகள் விபத்தில் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கிருஷ்ணகிரி:

    வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஆமினாபாத் பகுதியை சேர்ந்தவர் ஹம்மாத். இவருக்கு கடந்த சனிக்கிழமை ஆம்பூரில் திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் இவர் மனைவியுடன் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, நேற்று நள்ளிரவு காரில் ஊருக்கு திரும்பி வந்துகொண்டு இருந்தனர்.

    அப்போது அவர்கள் வந்து கொண்டிருந்த கார் எமக்கல்னத்தம் என்ற இடத்தில் வந்தபொது ஓட்டுனர் ஹம்மாத்தின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள தடுப்புவேலி மீது மோதி சென்னை-பெங்களூர் சாலைக்கு சென்றது. அப்போது சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த கண்டெய்னர் லாரி கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஹம்மத் மற்றும் அவரது மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இச்சம்பவம் குறித்து பருகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமணம் முடிந்து ஆறு நாட்களே ஆன நிலையில் புதுமண தம்பதிகள் இறந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதியதில் மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பாண்டுரங்கன் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் அபிஷேக்(18). இவரது நண்பர் பாலாஜி(18). இருவரும் பிளஸ் 2 படித்து வந்தனர்.

    இவர்கள் 2பேரூம் பைக்கில் கிருஷ்ணகிரிக்கு வந்துவிட்டு, பின்னர் ராயக்கோட்டைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது சிக்கபூவத்தி பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த மினி லாரி, இவர்கள் சென்ற பைக் மீது மோதியது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டதில், பைக்யை ஓட்டி சென்ற அபிஷேக் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானான். படுகாயம் அடைந்த பாலாஜியை அங்கிருந்தவர்கள் உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×