search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewel robbery in worker house"

    தேனி அருகே கூலித் தொழிலாளி வீட்டில் நகை கொள்ளைபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தேனி:

    மார்க்கையன்கோட்டை நாட்டாண்மை வீரணத்தேவர் தெருவை சேர்ந்தவர் முருகேசன்(வயது62). கூலிவேலை செய்து வருகிறார். தினமும் பக்கத்தில் உள்ள ஊருக்கு தன் மனைவியுடன் சென்று கூலிவேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று அதேபோல் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீடு திறக்கப்பட்ட நிலையில் இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 5 பவுன் தங்கசெயின் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். திருடுபோன நகையின் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.

    இதுகுறித்து சின்னமனூர் போலீசில் முருகேசன் அதேபகுதியை சேர்ந்த சுமதி என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×