search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "helmet safety campaign"

    திண்டுக்கல்லில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போலீசார் பிரசாரம் மேற்கொண்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போலீசார் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் - கரூர் சாலையில் வழிகாட்டி விநாயகர் கோவில் அருகே டி.எஸ்.பி. மோகன்ராஜ் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    போக்குவரத்து ஆய்வாளர் பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் காளீஸ்வரன், மேற்கு இன்ஸ்பெக்டர் குமரேசன், சப்-இன்ஸ்பெக்டர் தாவூது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் அவ்வழியே வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை ஹெல்மெட் அணிந்து பயணம் செய்யுமாறும், பின்னால் அமர்ந்து வருபவர்களும் இதனை கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து சாலை விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று டி.எஸ்.பி. மோகன்ராஜ் தெரிவித்தார்.

    ×