search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Harassmence case"

    குழித்துறை அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    குழித்துறை:

    குழித்துறையை அடுத்த பாகோடு பகுதியை சேர்ந்தவர் பொன்னு பிள்ளை (வயது 60).

    இவரது வீடு அருகே ஒரு குடும்பம் வசித்து வந்தது. அவர்களுக்கு 7 மற்றும் 9 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த சிறுமிகளை பொன்னுபிள்ளை அடிக்கடி அழைத்து பேசுவார். சம்பவத்தன்றும் அருகில் உள்ள குளக்கரைக்கு சிறுமிகளை பொன்னு பிள்ளை அழைத்து சென்றார். அங்கு சென்றதும் சிறுமிகள் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி சென்றனர். அவர்களை கண்டதும் பொன்னுபிள்ளை தப்பியோடிவிட்டார். சிறுமிகளிடம் விசாரித்த போது பொன்னுபிள்ளை சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இது பற்றி சிறுமிகளின் பெற்றோர், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் எழிலரசி விசாரணை நடத்தினார்.

    பின்னர் பொன்னுபிள்ளை மீது போலீசார் போக்சோ வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
    ×