search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gudalur youth attack"

    கூடலூர் அருகே பணம் கேட்டு வாலிபரை பிளேடால் கீறிய ரவுடிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    கூடலூர் அருகே உள்ள கலிமேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் புகழேந்தி (வயது 33). இவர் சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இரும்புக்கடை முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் நாங்கள் இந்த பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் எனக் கூறி பணம் கேட்டுள்ளனர். அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறவே அவர் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்க முயன்றனர்.

    இதனால் அவர் சத்தம் போடவே பிளேடால் புகழேந்தியை கீறி கொலை மிரட்டல் விடுத்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒன்று திரண்டு அவர்களை பிடித்து கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணையில் அவர்கள் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சஞ்சய் (23), வடக்கு ரத வீதியைச் சேர்ந்த அஜித் (19) என தெரிய வந்தது. போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர் அருகே சாக்கடை தகராறில் 2 பேரை தாக்கிய நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் கூடலூர் கருணாநிதி காலனியைச் சேர்ந்தவர் ராமர் (வயது 48). அதே பகுதியைச் சேர்ந்தவர் குபேந்திரன் (42). சம்பவத்தன்று நகராட்சி துப்புரவு ஊழியர்கள் கால்வாயை தூர் வாறி அந்த குப்பையை குபேந்திரன் வீட்டு முன்பு கொட்டி விட்டனர்.

    இதற்கு ராமர்தான் காரணம் என்று நினைத்த குபேந்திரன் அவரிடம் தகராறு செய்தார். மேலும் அரிவாளால் அவரை கடுமையாக தாக்கினார். இதனை தடுக்க வந்த தாத்தப்பன் என்பவரையும் அவர் தாக்கினார்.

    படுகாயமடைந்த 2 பேரும் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து ராமர் கொடுத்த புகாரின் பேரில் குபேந்திரன் மீது கூடலூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×