search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grievances"

    • மாவட்ட அளவிலான ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் விருதுநகரில் அடுத்த மாதம் நடக்கிறது.
    • ஓய்வூதியர்களின் குறைகளை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையிலும், சென்னை ஓய்வூதிய இயக்குநர் முன்னிலையிலும் வருகிற 17-ந் தேதி (புதன்கிழமை) விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பான கோரிக்கை மனுக்களை வருகிற 8-ந் தேதிக்குள் விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு இரட்டைப் பிரதிகளில் அனுப்பி வைக்கலாம்.

    விண்ணப்பங்களில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் மனு என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தில் மனுதாரர் கோரிக்கை விவரத்துடன் ஓய்வூதியதாரர் பெயர், குடும்ப ஓய்வூதியம் என்றால் உறவுமுறை, பணியில் இருந்து ஓய்வு பெற்ற நாள், கடைசியாக பணிபுரிந்த அலுவலகம், ஓய்வூதிய கொடுவை எண் மற்றும் ஓய்வூதியம் பெறும் கருவூலம் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும்.

    தற்போது ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைபாடுகள் குறித்து ஏற்கனவே சென்னையிலுள்ள மாநில கணக்காயருக்கு அனுப்பப்பட்டு அது தொடர்பான பதில் பெற்றிருப்பின் அதன் விவரங்களும் இணைக்கப்பட வேண்டும்.ஓய்வூதியர்களுக்கு உள்ள குறைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விவாதித்து, ஓய்வூதியர்களின் குறைகளை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஓய்வூதியர் கூட்டம், குறைகள், Pensioners Meeting, Grievances,

    ஓய்வூதியர் கூட்டம், குறைகள், Pensioners Meeting, Grievances,

    ×