search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gang arrest"

    சென்னையில் மோட்டார் சைக்கிளை திருடி வெளிமாவட்டத்தில் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    எம்.ஜி.ஆர். நகர், ஜாபர்கான் பேட்டையில் இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த கடலூர் மாவட்டம், நாட்டார்மங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜ்மோகனை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது நண்பர்கள் 3 பேருடன் சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இரவு நேரங்களில் கே.கே.நகர், எம்.ஜி.ஆர்.நகர், விருகம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிளை திருடி வந்ததை ஒப்புக் கொண்டார். மேலும் திருடிய மோட்டார் சைக்கிளை கடலூர், அரியலூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்ததாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து ராஜ்மோகன் மற்றம் அவரது கூட்டாளிகள் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் சுத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த சுஷிவன், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பல்வாய்கண்டன் பகுதியைச் சேர்ந்த மணவாளன், நாட்டார்மங்கலம் பகுதியைச் சேர்ந்த அசோக் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 23 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் ஆகும். மேலும் திருட்டு பைக்கை வெளியூர்களில் விற்பனை செய்ய உதவிய மற்றொரு நண்பரான தலைமறைவாக உள்ள கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×